For Daily Alerts
Just In
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரத்த தான முகாம்
துபாய்: துபாயில் உள்ள தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் அல் வாசல் மருத்துவமனையில் கடந்த 12ம் தேதி ரத்த தான முகாம் நடத்தப்பட்டது.
காலை 8 மணியளவில் தொடங்கி பிற்பகல் 3 மணி வரை நடைபெற்ற இந்த முகாமில் 182 பேர் ரத்த தானம் வழங்கினார்கள்.
துபை கிளையான தேய்ரா, சத்வா, ஹோருல் அன்ஸ், சோனாப்பூர், ஜெபல் அலி, அல்கூஸ் ஆகிய பகுதிகளிருந்து ஆர்வமுடன் பலரும் வந்திருந்தனர்.
சகோ. சாதிக் அலி (மருத்துவ அணி செயலாளர்) மற்றும் சகோ. சாந்து உமர் (மக்கள் தொடர்பு செயலாளர்), சகோ. அபுதாஹிர் ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நடத்தினர்.
Comments
Story first published: Wednesday, March 17, 2010, 10:33 [IST]