For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஊதிய உயர்வு கோரி கூட்டுறவு வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்

By Staff
Google Oneindia Tamil News

மதுரை: சம்பள உயர்வு கோரி வரும் 30 ம் தேதி வேலை நிறுத்தம் செய்ய, கூட்டுறவு வங்கி ஊழியர்கள் முடிவு செய்துள்ளனர்.

தமிழகத்தில் 23 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த வங்கி ஊழியர்களுக்கு கடந்த 2006 ஜனவரி மாதம் சம்பள உயர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது.

இதன்படி 7 மற்றும் 14 சதவீதம் என்ற அடிப்படையில், உயர்வு விகிதம் அறிவிக்கப்பட்டது. அறிவிப்பு வெளியிட்டு பல ஆண்டுகளாகியும், சம்பள உயர்வு நிலுவையில் உள்ளதாக ஊழியர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில் சுமார் 3,000 பணியிடங்களும், நகர வங்கியில் சுமார் 800 பணியிடங்களும் காலியாக உள்ளதாக கூறப்படுகின்றது. இதனால் ஊழியர்களுக்கு பணிச்சுமை அதிகரித்துள்ளதாக கூறுகின்றனர்.

எனவே, நாளை (மார்ச் 19ம் தேதி) மாவட்ட தலைநகரில் ஆர்ப்பாட்டம், 26 ம் தேதி தர்ணா போராட்டமும், 30 ம் தேதி வேலை நிறுத்த போராட்டமும் நடைபெறும் என்று கூட்டுறவு வங்கி ஊழியர் சங்க மாநில தலைவர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X