For Daily Alerts
Just In
கிரீஸ்: பாகிஸ்தானிய தலைவர் வீட்டில் குண்டுவெடிப்பு
ஏதென்ஸ்: கிரீஸ் தலைநகர் ஏதென்சில் உள்ள பாகிஸ்தானிய சமூகத் தலைவர் ஒருவரி்ன் வீட்டுக்கு வெளியே குண்டு வெடித்தது. இதில் யாரும் காயமடையவில்லை.
இந்த குண்டுவெடிப்புக்கு 15 நிமிடங்களுக்கு முன் கிரீஸ் நாட்டு தொலைக்காட்சிக்கும், ஒரு செய்தித் தாள் அலுவலகத்துக்கும் இது தொடர்பான மிரட்டல் தொலைபேசி வந்தது. அதில் பேசிய நபர், சில நிமிடங்களில் இந்த நபரின் வீட்டில் குண்டு வெடிக்கும் என்றார்.
இதையடுத்து அந்த நிறுவனங்கள் போலீசாரை எச்சரித்து அவர்கள் சம்பவ இடத்தை அடைவதற்குள் குண்டு வெடித்துவிட்டது.
பாகிஸ்தான்-கிரீஸ் நட்புறவுக் கழகம் என்ற அமைப்பி்ன் தலைவராக உள்ள அவரது வீட்டை யார் குறி வைத்துத் தாக்கினர் என்று தெரியவில்லை. கிரீஸ் நாட்டு வலதுசாரி அமைப்பினரால் பாகி்ஸ்தானியர்கள் அவ்வப்போது தாக்கப்பட்டு வரும் நிலையில் இந்த குண்டு வெடித்துள்ளது.
Comments
Story first published: Saturday, March 20, 2010, 12:42 [IST]