For Daily Alerts
Just In
'சூப்பர்ஸானிக்' பிரம்மோஸ் ஏவுகணை சோதனை வெற்றி!
ஒரிசா கடலோரப் பகுதியில் இந்திய கடற்படை கப்பல் ஐஎன்எஸ் ரன்வீரில் இருந்து இன்று பகல் 11.30 மணிக்கு இந்த சோதனை நடத்தப்பட்டது.
இந்தியா மற்றும் ரஷ்யா கூட்டுத்தயாரிப்பில் உருவாக்கப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணையின் 22வது சோதனை இது.
இன்றைய சோதனை திருப்திகரமாகவும், வெற்றிகரமாகவும் அமைந்ததாக பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் நிறுவன நிர்வாக இயக்குனர் சிவதாணுப் பிள்ளை கூறினார்.
290 கிமீ தொலைவில் உள்ள எதிரிகளின் இலக்கை 'மேக் 2.8' வேகத்தில் சென்று தாக்கும் வல்லமை கொண்டது இந்த ஏவுகணை. (பல்வேறு சூழலியல் கூறுகளின் அடிப்படையில் வேறுபடும் 'மேக 1' வேகம், மணிக்கு சுமார் 1,225 கிமீ)
3 டன் எடையும், ஒன்பது மீட்டர் நீளமும் கொண்டது. இந்த ஏவுகணை ஏற்கனவே படைப்பிரிவில் இணைக்கப்பட்டுள்ளது.
இந்த வகை ஏவுகணையைக் கொண்டுள்ள ஒரே நாடு உலகில் இந்தியா மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
Story first published: Sunday, March 21, 2010, 17:44 [IST]