அதிமுகவுக்கு கிறிஸ்தவ முன்னேற்ற கழகம் ஆதரவு
சேலம்: பென்னாகரம் இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு கிறிஸ்தவ முன்னேற்றக் கழகம் ஆதரவு அளித்துள்ளது.
அக் கட்சியின் தலைவர் ஜோசப் பெர்னாண்டோ நிருபர்களிடம் கூறுகையில்,
கடந்த 1822ம் ஆண்டு முதல் கிறிஸ்தவர்களின் திருமணம் தேவாலயங்களில் மட்டுமே பதிவு செய்யப்பட்டு வருகிறது. ஆனால் 24.11.09 அன்று முதல் திருமணத்தை பதிவு செய்வது கட்டாயம் என்று திமுக அரசு சட்டம் கொண்டு வந்துள்ளது. இது சிறுபான்மை கிறிஸ்தவர்களுக்கு உள்ள உரிமையை பறிப்பதாகும்.
தமிழகத்தில் சிறுபான்மை மக்களின் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பற்ற நிலை உள்ளது.
திமுகவுக்கு கிறிஸ்தவர்களின் எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் பென்னாகரம் இடைத் தேர்தலில், தொகுதியில் உள்ள தாழ்த்தப்பட்ட மக்கள், கிறிஸ்தவர்கள் அனைவரும் அதிமுகவுக்கு வாக்களிப்பார்கள்.
மேலும் அதிமுகவுக்கு ஆதரவாக எங்கள் கட்சி பிரசாரத்திலும் ஈடுபடும் என்றார்.