For Daily Alerts
Just In
ஐபிஎல் போட்டியை நேரில் ரசித்த முதல்வர்!
சென்னை பஞ்சாப் இடையிலான ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நேற்றிரவு நடந்தது. இந்த போட்டியை நேரில் பார்ப்பதற்காக முதல்வர் கருணாநிதி இரவு 8.15 மணிக்கு ஸ்டேடியத்துக்கு வந்தார்.
பின்னர் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவருக்கான விசேஷ அறையில் அமர்ந்து போட்டியை அவர் ரசித்து பார்த்தார்.
மத்திய அமைச்சர் தயாநிதிமாறன், முன்னாள் மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி, திட்டக்குழு துணைத் தலைவர் மு.நாகநாதன், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தலைவர் என்.சீனிவாசன், முதல் அமைச்சரின் செயலாளர்கள் சண்முகநாதன், ராஜரத்தினம், அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் ஆகியோரும் அந்த அறையில் இருந்தபடி போட்டியை ரசித்தனர்.
சூப்பர் ஓவரின் போது மிகுந்த ஆர்வத்துடன் பார்த்தார் முதல்வர்.
Comments
Story first published: Monday, March 22, 2010, 11:14 [IST]