For Daily Alerts
Just In
ஐஸ்லாந்தில் எரிமலை வெடிப்பு - நூற்றுக்கணக்கானோர் இடம்பெயர்ந்தனர்
ரெய்க்ஜவிக்: ஐஸ்லாந்தில் உள்ள வெப்பப்பாறைகளில் எரிமலை வெடிக்கத் தொடங்கியுள்ளதால் ஏராளமான மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.
ஐரோப்பா கண்டத்தில் அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள ஐஸ்லாந்து தீவுகளின் தலைநகரான ரெய்க்ஜவிக் நகரில் இருந்து 125 கிமீ கிழக்கே உள்ள முகடுகளில் எரிமலை குழம்பு பொங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே கடந்த வாரம் இந்த பகுதியில் ஏற்பட்ட தொடர் நில அதிர்வுகளின் மூலம் எரிமலை வெடிக்கும் அபாயம் குறித்து முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டது.
தற்போது அப்பகுதியின் சுற்றுச்சூழலில், வெப்பத் துகள்கள் மற்றும் வெப்பக்காற்று பரவல் அதிகரித்திருப்பதால், அதை ஒட்டியுள்ள பகுதிகளில் வாழும் சுமார் 600க்கும் மேற்பட்ட மக்கள் இடம் பெயர்ந்து பாதுகாப்பான பகுதிகளுக்கு சென்றுள்ளனர்.
அவ்வழியாக விமானப் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது.
Story first published: Monday, March 22, 2010, 11:22 [IST]