For Daily Alerts
Just In
கடலோர பாதுகாப்புக்கு 36 அதிவிரைவு படகுகள்: எல் அண்ட் டி தயாரிப்பு!
மும்பை: இந்திய கடலோர பாதுகாப்புப் படையினருக்காக 36 அதிவிரைவு படகுகளை ரூ.970 கோடி செலவில் தயாரிக்க உள்ளதாக எல் அண்ட டி நிறுவனம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக இந்திய பாதுகாப்பு அமைச்சகத்துக்கும் எல் அண்ட் டி நிறுவனத்துக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
இந்த படகுகளுக்கான கட்டுமானப் பணிகளின் ஒரு பகுதி குஜராத்தில் உள்ள ஹஸிரா கப்பல் வடிவமைப்பு மையத்தில் நடைபெறும். இதன் பிறகு மீதப் பணிகள் சென்னை எண்ணூர் அருகே காட்டுப்பள்ளியில் அமைய உள்ள புதிய ஷிப்யார்டில் பணிகள்
எல் அண்ட் டி நிறுவனம் குஜராத்தில் உள்ள தொழி்ற்சாலையின் மூலமாக ஏற்கனவே கப்பல்களை ஏற்றுமதிக்காக வடிவமைத்து வருவது குறிப்பிடத்தக்கது.
Comments
Story first published: Monday, March 22, 2010, 15:00 [IST]