For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சென்னையில் விளையாடக் கூடாது - இலங்கை வீரர் ஜெயசூர்யாவுக்கு டாக்டர் கிருஷ்ணசாமி எச்சரிக்கை

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: இலங்கை வீரர் சனத் ஜெயசூர்யா, சென்னையில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் விளையாட அனுமதிக்க மாட்டோம் என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி எச்சரித்துள்ளார்.

மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெற்று ஆடி வருகிறார் ஜெயசூர்யா. இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் ராஜபக்சே கட்சி சார்பில் மாத்தரை மாவட்டத்தில் போட்டியிடவுள்ளார்.

இதையடுத்து அவர் சென்னை போட்டியில் விளையாடுவதை அனுமதிக்க முடியாது என்று டாக்டர் கிருஷ்ணசாமி எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ஆயிரக்கணக்கான தமிழர்களை ஈவு இரக்கமின்றிக் கொன்று குவித்த கொடுங்கோவன் ராஜபக்சே. அப்படிப்பட்ட ஒருவரின் கட்சியின் சார்பில் ஜெயசூர்யா போட்டியிடுகிறார். எனவே இப்படிப்பட்ட நபர் சென்னையில் வந்து ஆடுவதை அனுமதிக்க முடியாது. அனுமதிக்கவும் கூடாது.

ஜெயசூர்யா எங்களது எச்சரிக்கையை மீறி விளையாடினால், மைதானத்திற்குக் திரண்டு வந்து போராட்டம் நடத்துவோம் என்று எச்சரித்துள்ளார் கிருஷ்ணசாமி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X