For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

எய்ட்ஸ் பாதித்த கர்ப்பிணி பெண்ணின் கரு கலைப்பு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: எச்ஐவி பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றில் இருந்த 19 வார கருவை மருத்துவர்கள் கலைத்தனர்.

சென்னையைச் சேர்ந்தவர் ரேகா என்ற 28 வயது பெண் 5 மாத கர்ப்பிணியாக இருந்தார்.

ரத்தப் பரிசோதனை செய்தபோது இவர் எச்ஐவி கிருமிகளால் தாக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

கருவிலும் எச்ஐவி கிருமி பாதித்திருப்பதால், கருவை கலைத்துவிட முடிவு செய்திருந்தனர்.

ஆனால், கருவை கலைக்க அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் மறுத்துவிட்டனர்.

பின்னர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சென்ற ரேகா தனது நிலையை மருத்துவர்களிடம் கூறினார்.

கரு உருவாகி சரியாக 19 வாரங்கள் ஆவதை அறிந்த மருத்துவர்கள், 20 வாரங்கள் நிறைவடையாத கருவை கலைக்க சட்டத்தில் இடம் உள்ளது எனக்கூறி கருக்கலைப்பை நடத்தினர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X