ஹெட்லியை விசாரிக்க தேதி குறிக்கக் கோரி அமெரிக்காவுக்குக் கடிதம் - இந்தியா
டெல்லி: டேவிட் கோல்மேன் ஹெட்லியை விசாரிக்க தேதி, நேரம், இடம் நிர்ணயம் செய்யுமாறு கோரி விரைவில் அமெரிக்க நீதித்துறைக்கு கடிதம் எழுதவிருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தற்போது மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் இங்கிலாந்து சென்றுள்ளார். அவர் இந்தியா திரும்பியவுடன், இந்தக் கடிதம் குறித்து இறுதி செய்ய்படும். பின்னர் அது அமெரிக்க நீதித்துறைக்கு அனுப்பபடும் என உள்துறை அமைச்சக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஹெட்லியை எப்போது விசாரிக்கலாம், எங்கு வைத்து விசாரிக்கலாம் என்பதை தீர்மானித்து முடிவு செய்து அதை திட்டவட்டமாக தெரிவிக்குமாறு அமெரிக்காவை இந்தியா முறைப்படி கேட்கவுள்ளது.
மேலும் ஹெட்லியை முறைப்படி விசாரித்த பின்னர் அவன் மீது குற்றப்பத்திரிக்கையைத் தாக்கல் செய் தேசிய புலனாய்வு ஏஜென்சி முடிவு செய்துள்ளதாம்.
இந்த நிலையில், ஹெட்லியை விசாரிக்க இந்தியாவுக்கு அனுமதிப்பது குறித்து விரைவில் சிகாகோ கோர்ட்டின் அனுமதியைப் பெறவுள்ளது அமெரிக்க நீதித்துறை. அந்த அனுமதி கிடைத்த பி்ன்னர்தான் இந்தியாவின் கோரிக்கைக்கு அமெரிக்கா பதிலளிக்கும் என்று தெரிகிறது.