For Quick Alerts
For Daily Alerts
Just In
மத்திய பாதுகாப்பு அமைச்சரின் வாகனம் மோதி 5 பேர் பலி
ஆந்திர மாநிலத்தில் தனது சொந்த தொகுதியான காக்கிநாடாவுக்கு அமைச்சர் சென்றுகொண்டிருந்த போது கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் இன்று காலை இந்த கோர விபத்து நடந்துள்ளது.
பலியான ஐந்து பேரில் 4 பேர் பெண்கள். ஆட்டோவில் பயணித்துக் கொண்டு வந்த அவர்கள் மீது வேகமாக வந்த அமைச்சரின் பாதுகாப்பு வாகனம் எதிர்பாராத விதமாக மோதியது.
மோதிய வேகத்தில் ஆட்டோ தூக்கி வீசப்பட்டு நொறுங்கியது. அதில் இருந்த 4 பெண்கள் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
இந்த விபத்தில் படுகாயமடைந்தவர்கள் உடனடியாக அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்தார். இரண்டு போலீஸ் காஸ்டபிள் உட்பட ஏழு பேர் தொடர்நது சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
Comments
Story first published: Thursday, March 25, 2010, 16:40 [IST]