For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திருமலை: தங்கத் தகடு பதிக்க ரூ 6 கோடி கொடுத்த மல்லையா!

By Staff
Google Oneindia Tamil News

Vijay Mallya
திருப்பதி: திருமலையில் உள்ள ஏழுமலையான் கோயிலில் தங்கத்தகடு பதிக்க ரூ 6 கோடி நன்கொடை வழங்கியுள்ளார் பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா.

ராமநவமியையொட்டி பெங்களூர் தொழிலதிபர் விஜய் மல்லையா திருமலையில் தனது குடும்பத்தினருடன் சாமி கும்பிட்டார்.

அப்போது கோவில் மணி மண்டபத்தில் 16 வாயில்களில் தங்க தகடு பதிக்க ரூ. 6 கோடி வழங்கினார். அதை அறங்காவலர் குழு தலைவர் ஆதிகேசவலு பெற்றுக் கொண்டார்.

இது தவிர கோயிலின் 18 கதவுகளுக்கும் கூட தங்கம் பதிக்க உதவுமாறு கேட்டுக் கொண்டார் ஆதிகேசவலு. இதை விஜய் மல்லையாயும் ஏற்றுக் கொண்டு மேலும் ரூ. 5 கோடி தருவதாகக் கூறினார்.

நாளை முதல் வசந்த உற்சவம்:

திருமலையில் நாளை முதல் வசந்த உற்சவம் நடைபெறுகிறது. இதற்காக கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, பிரமோற்சவம், சகஸ்ரதேவ அலங்கார சேவை ஆகியவைகள் ரத்து செய்யப்படுகிறது.

வசந்த உற்சவத்துக்கு ரூ. 3,000 பணம் செலுத்த வேண்டும். 10 பேர் வரை இதில் பங்கேற்கலாம்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X