For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பென்னாகரத்தில் வென்றால் லாரிகள் மூலம் தண்ணீர் தருவோம்- விஜயகாந்த்

By Staff
Google Oneindia Tamil News

தர்மபுரி: பென்னாகரத்தில் தேமுதிக வெற்றி பெற்றால் தொகுதி முழுவதும் லாரிகளில் குடிநீர் விநியோகம் செய்யப்படும் என்று அக்கட்சி தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

பென்னாகரத்தில் நடந்த இறுதிக் கட்ட தேர்தல் பிரசாரத்தின்போது விஜயகாந்த் பேசுகையில்,

வறட்சியால் பாதித்துள்ள பென்னாகரம் தொகுதியை இதுவரை கண்டுக்கொள்ளாத திமுக, அதிமுக,​​ பாமக​ கட்சிகள் தற்போது தேர்தலுக்காக பொய் பிரசாரம் செய்து வருகின்றன.

பென்னாகரத்தில் தண்ணீர் பிரச்சனையை தீர்க்காத ஆளும் கட்சிக்கு பாடம் புகட்டவே இத்தேர்தல் நடைபெறுகிறது.​ அதை தோற்கடிக்க வேண்டும்.

பென்னாகரம் தொகுதி மக்கள் வேலை தேடி அண்டை மாநிலங்களுக்கு சென்று வாழ்க்கை நடத்துகின்றனர்.​ இந்நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் தொழில்வளர்ச்சியை ஏற்படுத்த எந்தக் கட்சியும் ஆர்வம் காட்டவில்லை.​

தேமுதிக​ வெற்றிபெற்றால் வீட்டுக்கு ஒருவருக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தித் தருவோம்.​ பணத்தையும்,​​ சாதியையும் நம்பி சில கட்சிகள் பென்னாகரம் இடைத்தேர்தலில் களம்
இறங்கியுள்ளன.​ ஆனால், தேமுதிக​ மக்களை நம்பி களம் இறங்கியுள்ளது.​ எனவே தேமுதிகவுக்கு வாக்களியுங்கள் என்றார் விஜயகாந்த்.

அப்ப தோற்றால் தண்ணீர் தர மாட்டாரா?.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X