தமிழக அரசு ஊழியர்களுக்கு 8% அகவிலைப்படி உயர்வு!
சென்னை: தமிழக அரசு ஊழியர்களுக்கு 8 சதவீத அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படுவதாக முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
சமீபத்தில்தான் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டது. அதையொட்டி தற்போது தமிழக அரசும் அகவிலைப்படியை உயர்த்தியுள்ளது.
இதுதொடர்பாக முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மத்திய அரசு ஊழியர்களைப் போன்று தமிழக அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படும்.
இந்த அகவிலைப்படி உயர்வு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியம் பெறுவோர், ஓய்வூதியம் பெறுவோர் குடும்பத்தினர் ஆகியோருக்கு வழங்கப்படும். 2010ம் ஆண்டு ஜனவரி முதல் தேதியிலிருந்து கணக்கிடப்பட்டு நிலுவையின்றி இந்த புதிய அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும்.
அகவிலைப்படி உயர்வு காரணமாக அரசுக்கு கூடுதலாக ரூ.1448 கோடி செலவு ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.