60 கோடிக்குமேல் தொலைபேசி இணைப்புகள்!-ராசா பெருமிதம்
சென்னை அண்ணா பல்கலைக் கழக பொறியியல் கல்லூரிகளான மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, கிண்டி பொறியியல் கல்லூரி, அழகப்பா பொறியியல் கல்லூரி, கட்டடக் கலை மற்றும் திட்டமிடல் பள்ளி போன்ற கல்வி நிறுவனங்களின் பட்டமளிப்பு விழாவில் மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசா பங்கேற்றுப் பேசியதாவது:
அடுத்த 5 ஆண்டுகளில் நாட்டில் உள்ள அனைத்துப் பல்கலைக் கழகங்களும் ரூ.7.000 கோடி மதிப்பில் இணைக்கப்பட உள்ளன.
வரும் 2012ம் ஆண்டுக்குள் நாடு முழுக்க 60 கோடி தொலைபேசி இணைப்புகள் வழங்கப்பட வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இப்போது குறித்த கெடுவுக்கு இரு ஆண்டுகளுக்கு முன்பாகவே, அதாவது கடந்த மாதமே இந்த இலக்கு எட்டப்பட்டுவிட்டது.
மாணவர்கள் சமூக பொருளாதார மாற்றங்கலை உன்னிப்பாக கவனித்து, தங்களின் பங்களிப்பும் அதில் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்என்றார்.
விழாவில் 4,151 இளநிலை, முதுநிலை மற்றும் ஆராய்ச்சி மாணவர்களுக்கு பட்டம் வழங்கப்பட்டது.
அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் மன்னர் ஜவஹர் தலைமை தாங்கினார்.