For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அதிமுகவில் உண்மையான தொண்டர்களே இல்லை-எஸ்.வி.சேகர்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: அதிமுகவில் உண்மையான தொண்டர்களே இல்லை என்று அக் கட்சியிலிருந்து விலகிய எம்எல்ஏ எஸ்.வி.சேகர் கூறினார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

பென்னாகரம் இடைத் தேர்தலில் அதிமுக மூன்றாவது இடத்துக்கு வந்துள்ளது. திமுகவினரின் கடுமையான உழைப்பின் பலன்தான் பென்னாகரம் இடைத் தேர்தல் வெற்றி.

வழக்கமாகவே ஜெயலலிதா ஹெலிகாப்டரில் வந்து இறங்கி ஒரு பரபரப்பை ஏற்படுத்துவார். அதிமுகவினரும் அவர் இருக்கும் வரை பரபரப்பாக செயல்படுவார்கள். அவர் திரும்ப ஹெலிகாப்டரில் ஏறியவுடன் அமைதியாகிவிடுவார்கள். அதைத் தான் பென்னாகரத்திலும் செய்துள்ளனர்.

அதிமுகவில் உண்மையான தொண்டர்களே இல்லை. அவர்கள் எல்லாம் திமுகவுக்கு வந்துவிட்டனர். எந்த விசுவாசமும் இல்லாத அதிமுகவினரை வைத்துக் கொண்டு தான் பிரச்சாரம் செய்தார ஜெயலலிதா என்றார் சேகர்.

சொந்த ஊரிலேலே பின்தங்கிய அதிமுக வேட்பாளர்:

பென்னாகரத்தல் அதிமுக வேட்பாளர் அன்பழகன் தனது சொந்த ஊரான தாளப்பள்ளத்திலேயே குறைந்த ஓட்டுக்கள் வாங்கி பின் தங்கியுள்ளார்.

8வது சுற்றில் தாளப்பள்ளத்தில் பதிவான ஓட்டுகள் எண்ணப்பட்டபோது திமுகவுக்கு 360 ஓட்டுகளும், பாமகவுக்கு 310 ஓட்டுகளும் கிடைத்தன. ஆனால் அதிமுகவுக்கு 216 ஓட்டுகளே கிடைத்தன.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X