வைகோவின் அரசியல் பொன் விழா- மதிமுகவின் 11 நாள் கொண்டாட்டம்
தென் சென்னை மாவட்ட மதிமுக சார்பில் 13 இடங்களில் பொதுக்கூட்டங்கள் நடத்த மாவட்ட மதிமுக செயலாளர் மணிமாறன் ஏற்பாடு செய்துள்ளார்.
சேப்பாக்கத்தில் முதல் கூட்டம்...
சேப்பாக்கம் பகுதியில் ஏப்ரல் 8ம் தேதி முதல் கூட்டம் நடைபெறுகிறது. தொடர்ந்து 9ம் தேதி திருவல்லிக்கேணியிலும், 13ம் தேதி சைதாப்பேட்டையிலும், 16ம் தேதி விருகம்பாக்கத்திலும், 17ம் தேதி அண்ணா நகரிலும், 18ம் தேதி ஆயிரம் விளக்கிலும் பொதுக்கூட்டங்கள் நடைபெறுகின்றன.
19ம் தேதி தி.நகரில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. மே 5ம் தேதி மயிலாப்பூரில் ஒரு கூட்டம் நடைபெறும்.
மே 10ம் தேதி மதிமுக இளைஞரணி சார்பில் ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளு. 15ம் தேதி மாணவர் அணி சார்பிலும், 20ம் தேதி தொண்டர் அணி சார்பிலும், 25ம் தேதி மகளிர் அணி சார்பிலும் பொதுக்கூட்டம் நடைபெறும்.
அனைத்துக் கூட்டங்களிலும் சிறப்புப் பேச்சாளராக நாஞ்சில் சம்பத் பங்கேற்றுப் பேசுகிறார்.
இந்தக் கூட்டங்கள் முடிவடைந்த பின்னர் தீவுத் திடலில் பிரமாண்ட மாநாடு நடைபெறவுள்ளது. இதில் வைகோ பங்கேற்கிறார். முக்கியத் தலைவர்கள் கலந்து கொண்டு வைகோவை வாழ்த்திப் பேசவுள்ளனர். இதில் ஜெயல்லிதாவும் கலந்து கொள்ளக் கூடும் எனத் தெரிகிறது.