For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இயேசு நாதர் சிலுவையில் அறையப்பட்ட புனித வெள்ளி தினம் அனுசரிப்பு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: இயேசு நாதர் சிலுவையில் அறையப்பட்ட தினமான இன்று புனித வெள்ளி தினமாக தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டது.

இயேசு நாதரை சிலுவையில் அறைந்த தினத்தை புனித வெள்ளியாக கிறிஸ்தவ மக்கள் அனுசரிக்கின்றனர். இதையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. சிலுவைப் பாதை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.

சென்னை சாந்தோம் தேவாலயத்தில் புனித வெள்ளியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. இயேசுநாதர், சீடர்களின் பாதங்களை கழுவும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் கிராமத்தில் உள்ள புனித கருணை மாதா தேவாலயத்தில், நடந்த சிலுவைப் பாதை நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

இதேபோல தமிழகம் முழுவதும் உள்ள தேவாலயங்களில் புனித வெள்ளி அனுசரிக்கப்பட்டது.

இயேசு நாதர் உயிர்த்தெழுந்த தினமான வருகிற ஞாயிற்றுக்கிழமையன்று ஈஸ்டர் தினம் கொண்டாடப்படவுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X