திருச்சி பெல் நிறுவனத்துக்கு ரூ.2,510 கோடி லாபம்!
இதுகுறித்து அவர் நிருபர்களிடம் நேற்று கூறியது:
திருச்சி பெல் நிறுவனம் இந்த ஆண்டு ரூ.35,000 கோடி மதிப்புள்ள பணி ஆணைகள் பெற்றுள்ளது. பெல் குழுமத்தின் மொத்த விற்பனை ரூ.10,008 கோடியாகும். 2009-2010-ம் ஆண்டு வரிக்கு முந்தைய லாபம் ரூ.2,510 கோடி. இது கடந்த ஆண்டை விட 53 சதவிகிதம் அதிகமாகும்.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் ரூ.250 கோடி செலவில் பெல் நிறுவனத்தின் புதிய பிரிவு அடுத்த ஆண்டு (2011) டிசம்பர் மாதத்துக்குள் செயல்பட தொடங்கும்.
இந்த பிரிவு எதிர்காலத்தில் மேலும் விரிவுபடுத்தப்படும். 1000 ஊழியர்களுக்கு மேல் பணிபுரியும் பெல் நிறுவனம் 2005-ம் ஆண்டிற்கான சிறந்த தொழிலக நல்லுறவு தமிழக அரசு விருதினை (இரண்டாம் பரிசு) பெற்றுள்ளது.
திருச்சி பெல்லின் அனைத்து பிரிவுகளும் கடந்த நிதி ஆண்டில் ஐ.எஸ்.ஓ. 9001 மறுசான்றிதழ் பெற்றுள்ளன.
மேலும் 510 தொழிலாளர்களும், 63 மேற்பார்வையாளர்களும், 124 அதிகாரிகளும் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் மின் பற்றாக்குறை வராது!
பெல்நிறுவனம் கடந்த ஆண்டில் 5518 மெகாவாட் அளவு அனல் மின்நிலைய உபகரணங்கள் நிறுவி இயக்கி வைத்துள்ளது. பானிபட், விசாகப்பட்டினம், முஸாபர்பூர், ரெய்ச்சூர், விஜயவாடா உள்பட 11 மின்நிலையங்களில் பெல் நிறுவனம் புதுப்பித்தல் மற்றும் நவீனப்படுத்தும் பணிகளில் பெரிய அளவில் ஈடுபட்டுள்ளது.
நாட்டி மொத்த மின்திறனில் மூன்றில் இரண்டு பங்கு பெல் நிறுவனத்தால் நிறுவப்பட்டுள்ள மின் திட்டங்கள் மூலமே கிடைப்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது வேலூர், சென்னை ஆகிய அனல் மின்நிலையங்களுக்கு பாய்லர் மற்றும் சாதனங்கள் தயாரித்து வருகிறோம். இதன் உற்பத்தி தொடங்கிய பிறகு தமிழ்நாட்டில் மின்பற்றாக்குறை வராது..." என்றார்.