For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஹைதராபாத்தில் ஒருவார கால ஊரடங்கு தளர்த்தப்பட்டது!

By Staff
Google Oneindia Tamil News

ஹைதராபாத்: பழைய ஹைதராபாத் நகரில் கடந்த ஒரு வாரகாலமாக அமல் படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு இன்று தளர்த்தப்பட்டது.

பழைய ஹைதராபாத் பகுதியில் கடந்த சனிக்கிழமை மாலை இரு பிரிவினருக்கு இடையே கலவரம் மூண்டது.

இது நகரின் பல பகுதிகளுக்கும் பரவியதால் அன்று மாலை முதல் நகரின் பெரும்பாலான பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.

தொடர்ந்து ஐந்து நாட்களாக ஊரடங்கு உத்தரவு நீடித்ததால் மக்கள் வெளியில் நடமாட முடியவில்லை. இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.

நேற்று முன்தினம் காலை 2 மணி நேரம் மட்டுமே ஊரடங்கு தளர்த்தப்பட்டது. ஒரு கிலோ அரிசி 100 ரூபாய்க்கு விற்றதால் பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளானார்கள்.

நேற்று வெள்ளிக் கிழமை தொழுகைக்கு செல்லவும் பல முஸ்லிம் மக்களால் இயலவில்லை. பழைய ஹைதராபாத்தில் ஊரடங்கு காரணமாக உடனடி மருத்துவ சிகிச்சை பெற முடியாமல் ஒருவர் பலியானார்.

எனவே நேற்று மாலை காவல்துறை உயர் அதிகாரிகள் கூடி ஊரடங்கு நிலையை தளர்த்துவது குறித்து ஆலோசித்தார்கள்.

இதையடுத்து இன்று சனிக்கிழமை காலை எட்டு மணி முதல் பகல் 1 மணி வரை குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டும் ஊரடங்கை தளர்த்துவது என முடிவு செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து தற்போது பழைய ஹைதராபாத்தில் 17 காவல்துறை எல்லைக்கு உட்பட்ட இடங்களில் மட்டும் ஊரடங்கு தற்காலிகமாக தளர்த்தப்பட்டுள்ளது.

பல இடங்களில் சட்டம் ஒழுங்கு நிலைமை சுமூகமாக மாறி வருவதால் நாளை மேலும் கூடுதலான பகுதிகளில் ஊரடங்கை தளர்த்த முடிவு செய்துள்ளதாக போலீஸ் கமிஷ்னர் ஏ.கே.கான் தெரிவித்துள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X