யுஎஸ் உணவகத்தில் நுழைந்து மர்ம ஆசாமி துப்பாக்கிச் சூடு - 4 பேர் பலி!
லாஸ் ஏஞ்சல்ஸ்: லாஸ் ஏஞ்சல்ஸின் வடக்கு ஹாலிவுட் மாவட்டத்தில் உள்ள உணவகம் ஒன்றில் மர்ம நபர் திடீரென துப்பாக்கியால் தாறுமாறாக சுட்டதில் நான்கு பேர் கொல்லப்பட்டனர்.
சுமார் 30 வயது மதிக்கத்தக்க அர்மேனிய ஆசாமி திடீரென உணவகத்துக்குள் நுழைந்து கண்டவர்களை எல்லாம் நோக்கி துப்பாக்கியால் சுட்டார்.
கண் இமைக்கும் நேரத்தில் பெரும் களேபரத்தை ஏற்படுத்தி விட்டு, அந்த ஆசாமி தப்பியோடிவிட்டார்.
இதில் மூன்று இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மேலும் ஒருவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
உணவகத்தில் இருந்த பலர் இதில் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பலியான நான்கு பேரும் 20 முதல் 25 வயதுத்கு உட்பட்டவர்கள். திடீரென உணவகத்தில் புகுந்து வெறியாட்டம் ஆடிய நபரை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.