For Daily Alerts
Just In
நாடாளுமன்ற வளாகத்தில் இனி புதிய சிலைகளுக்கு அனுமதியில்லை!
லோக்சபா சபாநாயகர் மீராக் குமார் தலைமையிலான உயர்மட்டக் குழுவில் இதற்கான முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் தலைவர்களின் சிலைகள் மற்றும் உருவப்படங்கள் தொடர்பான கூட்டம் டெல்லியில் நடந்தது.
ஏற்கனவே ஏராளமான சிலைகளாலும், உருவப்படங்களாலும் நிரம்பி வழியும் நாடாளுமன்ற வளாகத்தில் மேலும் சிலைகளை வைப்பது வளாகத்தின் அழகை கெடுக்கும் வகையில் அமையும் என குழுவினர் கருத்து தெரிவித்தனர்.
நாடாளுமன்ற வளாகத்தின் அழகை கட்டிக்காக்கும் வகையிலும், சுற்றுச்சூழல் அம்சங்களின் அடிப்படையிலும் சிலைகள் வைப்பதற்கு முற்றுப்புள்ளி வைக்க இக்குழு தீர்மானித்து அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
Comments
Story first published: Sunday, April 4, 2010, 13:02 [IST]