For Daily Alerts
Just In
ஒராண்டுக்கான 'புராகிரஸ் கார்டு' தயாரிக்கிறது மத்திய அரசு!
டெல்லி: மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஆட்சிப் பொறுப்பேற்று, வரும் மே 22ம் தேதியுடன் ஒராண்டு நிறைவடைகிறது.
இதையொட்டி, ஓராண்டு காலத்தில் அரசு எப்படி செயல்பட்டது என்பதை மக்களுக்கு தெரிவிக்கும் வகையில் அறிக்கை தயாரித்து வெளியிட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இதற்கான பணிகளை, பிரதமர் மன்மோகன் சிங்கின் முதன்மைச் செயலாளர் டி.கே.ஏ.நாயர் இப்போதே தொடங்கிவிட்டார்.
பல்வேறு துறை அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுக்கு இதுதொடர்பாக கடிதம் எழுதப்பட்டுள்ளது. தாங்கள் பதவியில் இருந்து சாதித்தது குறித்தும், தங்கள் துறையில் மேற்கொள்ளப்பட்ட சாதனைகள் குறித்தும் விரிவாகவும், உடனடியாகவும் தகவல் தருமாறு டி.கே.ஏ.நாயர் கேட்டுள்ளார்.
Comments
Story first published: Sunday, April 4, 2010, 13:57 [IST]