நிலக்கரி இறக்குமதி: தவறான தகவல்களைக் கூறுகிறார் கருணாநிதி – ஜெ.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:
நிலக்கரி இறக்குமதியில் இழப்பு ஏற்படுவது குறித்து நான் விடுத்த அறிக்கைக்கு முதல்வர் கருணாநிதி நீண்ட பதில் அறிக்கை விடுத்துள்ளார். அதில் அவர் தவறான புள்ளி விவரங்களை அளித்துள்ளார்.
தமிழ்நாடு மின்சார வாரியத்தால் 200910ம் ஆண்டில் இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியின் மதிப்பு 520 கோடி ரூபாய் என்று முதலில் குறிப்பிட்டு இருந்தார். எனவே, நான் கூறியது போல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு என்பது எப்படி ஏற்பட்டு இருக்க முடியும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
ஆனால், அதன் பிறகு அவர் வெளியிட்ட திருத்த அறிக்கையில் இறக்குமதி செய்த நிலக்கரியின் மதிப்பு இரட்டிப்பு செய்யப்பட்டு இறக்குமதி செய்த நிலக்கரியின் மதிப்பு ஆயிரம் கோடி ரூபாய் என்று குறிப்பிட்டு இருந்தார். 520 கோடி ரூபாய் செலவு என்பது 5 மணி நேரத்திற்குள் ஆயிரம் கோடி ரூபாயாகிவிட்டது.
ஒரே வெப்பத்திறன் கொண்ட ஒரு டன் நிலக்கரி 77 அமெரிக்க டாலருக்கு கிடைக்கும் போது, அதனை 120 அமெரிக்க டாலர் விலை கொடுத்து வாங்குவது என்பது தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு இழப்பை ஏற்படுத்தாதா என்று அவர் கேட்டுள்ளார்.