For Daily Alerts
Just In
சோளிங்கர்: குளத்தில் மூழ்கி மூச்சுத் திணறி 3 சிறுவர்கள் சாவு!
சோளிங்கர்: சோளிங்கர் அருகே குளத்தில் குளித்த மூன்று மாணவர்கள் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
இவர்கள் மூவரும் வேலூர் மாவட்டம் சோளிங்கரை அடுத்த ஐம்பேடு காலனியை சேர்ந்தவர்கள். மணிகண்டன் (9), மூர்த்தி (8), சதீஷ் (9) ஆகிய மூவரும் சோளிங்கரில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தனர்.
நேற்று பள்ளி விடுமுறை என்பதால், வெயிலின் தாக்கத்தை தணித்துக்கொள்ள மூவரும் ஐம்பேடு ரேவதி அம்மன் கோவில் அருகே உள்ள குளத்தில் குளித்தனர்.
அப்போது, நீச்சல் தெரியாத மூன்று பேரும் ஆர்வமிகுதியில் குளத்தின் ஆழமான பகுதிக்கு சென்றுவிட்டனர். இதில், ஒருவர் பின் ஒருவராக தண்ணீரில் மூழ்கி, மூச்சுத்திணறி பரிதாபமாக இறந்தனர்.
தகவல் அறிந்த சோளிங்கர் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று, குளத்தில் மூழ்கி பலியான 3 மாணவர்களின் உடலையும் மீட்டனர்.
Comments
Story first published: Monday, April 5, 2010, 10:04 [IST]