For Daily Alerts
Just In
ராஜ்யசபாவில் கிரிமினல் பின்னணியுடன் கூடிய 37 எம்பிக்கள்
நாடுமுழுவதும் சுமார் ஆயிரத்து 200 தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து என்இடபுள்யூ மற்றும் எடிஆர் என்ற அமைப்புகளின் மூலம் ஆய்வு நடத்தப்பட்டது.
இதில், மொத்தமுள்ள 219 ராஜ்யசபா எம்.பி.க்களில் 37 பேர் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவர்களில் 12 பேர் மீதான வழக்குகள் மிகவும் சீரியசானவை.
இதில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் ஏழு பேர், பாஜகவின் ஆறு உறுப்பினரகள் மற்றும் சமாஜ்வாதி கட்சியின் மூன்று உறுப்பினர்கள் அடக்கம்.
அதோடு, தற்போது பதவியில் இருக்கும் ராஜ்யசபா உறுப்பினர்களில் 98 பேர் மில்லியனர்கள் என்றும், இதிலும் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களே முன்னிலை வகிக்கிறார்கள் என்றும் ஆய்வறிக்கை கூறுகிறது.
Story first published: Wednesday, April 7, 2010, 13:16 [IST]