ஏப்ரல் 9ம் தேதி 3 ஜி ஏலம் தொடக்கம்- ஒரு வாரம் நடக்கும்
இந்த ஏலம் மூலம் மத்திய அரசுக்கு 8 பில்லியன் டாலர் வருமானம் கிடைக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
வெள்ளிக்கிழமை நடக்கும் இந்த ஏலத்தில் நாட்டின் முன்னணி தொலைபேசி நிறுவனங்கள் பங்கேற்கின்றன.
முக்கியமான நிறுவனங்கள் அனைத்துமே இந்த ஏலத்தில் பங்கேற்பதால், போட்டி கடுமையாக இருக்கும் என்றும், இந்த ஏலத்தில் வெல்வது அந்த நிறுவனங்களின் எதிர்கால வளர்ச்சிக்கு மிக அவசியமானது என்பதாலேயே இந் நிலை உள்ளதாகவும் கூறப்படுகிறது.
குறைந்தபட்ச ஏலத் தொகை 780 மில்லியன் டாலர்கள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 12 நிறுவனங்கள் பங்கேற்கின்றன.
இந்த ஸ்பெக்ட்ரம் அலைவரசை ஒதுக்கீடு முடிந்த பிறகு, 2 கோடி புதிய சந்தாதாரர்கள் சேருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்றைய நிலவரப்படி நாட்டில் 545 மில்லியன் வாடிக்கையாளர்கள் செல்போன் இணைப்பு பெற்றுள்ளனர். இது நாட்டின் மக்கள் தொகையில் கிட்டத்தட்ட பாதி அளவாகும்.
இந்த ஏலத்தின் மூலம் 8 பில்லியன் டாலரை இந்திய அரசு பெற்றாலும், இந்தியாவை விட குறைந்த மார்க்கெட் மதிப்பு கொண்ட பிரிட்டன் இதே போன்றதொரு ஏலத்தில் 35 பில்லியன் டாலர்களை ஈட்டியது. கிட்டத்தட்ட 4 மடங்குக்கும் மேல். அதேபோல அமெரிக்கா 19 பில்லியன் டாலர்களை ஈட்டியது. ஆனால் இந்த நாடுகளை விட பல மடங்கு வாடிக்கையாளர்கள், சந்தை மதிப்பு கொண்ட இந்தியாவில் அடிமாட்டு விலைக்கு 3 ஜி அலைவரிசை விற்கப்படுவது குறிப்பிடத்தக்கது!