இந்தியா - சீனாவில் 1 பில்லியன் டாலர் முதலீடு செய்யும் ஏடி அண்ட் டி!
அமெரிக்காவின் பிரபலமான தொலைபேசி, இன்டர்நெட் சேவை நிறுவனம் ஏடி அண்ட் டி (அமெரிக்க டெலிபோன் அண்ட் டெலிகிராப்).
290 பில்லியன் டாலர் சொத்துக்கள், 3 லட்சம் பணியாளர்கள் என மிகப்பெரிய நிறுவனம் இது.
இந்தியா, சீனா மற்றும் ஜப்பான் நாடுகளிலும் தனது வர்த்தகத்தை விரிவாக்க முடிவு செய்து அதற்கான வேலைகளில் இறங்கியுள்ளது. அதேபோல தனது தற்போதைய சேவைகளையும் மேம்படுத்த முடிவு செய்துள்ளது.
பெல்ஜியம், பிரான்ஸ், ஜெர்மனி, ரஷ்யா, ஸ்பெயின், சீனா, இந்தியா, கனடா, இத்தாலி, நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா, வியட்நாம், மலேஷியா, சிங்கப்பூர், பிரேஸில், இந்தோனேஷியா, கொரியா, மெக்ஸிகோ, ஹாங்காங் போன்ற நாடுகளில் தங்களது வர்த்தகத்தை அதிகப்படுத்துவதோடு, பிராட்பேண்ட் இணைப்பின் வேகத்தை 24 Mbps அளவு அதிகப்படுத்தவும் முடிவு செய்துள்ளது ஏடி அண்ட் டி. இங்கெல்லாம் தொலைபேசி கேபிள் வழி வழங்கப்படும் தொலைக்காட்சி சேவையான ஐபிவி6 -ஐ தரவுள்ளது ஏடி அண்ட் டி.
1 ஜிபி அளவு வேகம் கொண்ட பிராட்பேண்ட் இணைப்புகள் தரவும் இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
'இன்று மிக சவாலான பொருளாதார சூழல் உள்ளது. சந்தையில் போட்டி எக்கச்சக்கம். 2006-ம் ஆண்டிலிருந்து 4 பில்லியன் டாலர் முதலீடு செய்துள்ளோம். இந்தியா, சீனா மற்றும் ஜப்பான் நாடுகளில் மட்டும் 1 பில்லியன் டாலருக்கும் அதிகமாக செலவிட திட்டமிட்டுள்ளோம்' என்கிறார் ஏடி அண்ட் டியின் சிஇஓ ரான் ஸ்பியர்ஸ்.