For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

செயில் நிறுவனத்தில் 20% பங்குகளை குறைக்க மத்திய அரசு முடிவு

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி: இந்திய உருக்கு ஆணையத்தின் 20 விழுக்காடு பங்குகளை விற்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

மத்திய அரசு நிறுவனமான இதன் பங்குகளை விற்பதன் மூலம் ரூ.16 ஆயிரம் கோடி நிதி திரட்டவும் திட்டமிடப்பட்டுள்ளது.

டெல்லியில் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

கூட்டத்துக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் இத்தகவலை தெரிவித்தார்.

இரண்டு பாகங்களாக இந்த பங்கு விற்பனை முடிந்த பின்னர் செயில் நிறுவனத்தில் மத்திய அரசின் பங்கு 69 சதவீதமாக இருக்கும். தற்போது செயில் நிறுவனத்தில் அரசின் பங்கு 85.82 சதவீதமாகும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X