ஹவுராவிலிருந்து புதுச்சேரிக்கு புதிய ரயில் இன்று முதல் இயக்கம்
புதுச்சேரி: ஹவுராவில் இருந்து திருப்பதி வழியாக புதுச்சேரிக்கு புதிய வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் இன்று முதல் இயக்கப்படுகிறது.
ஹவுரா - புதுச்சேரி இடையே திருப்பதி காட்பாடி விழுப்புரம் வழியாக வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படும் என ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருந்தது.
இதன்படி, ஹவுரா புதுச்சேரி எக்ஸ்பிரஸ் ரயில் சேவை இன்று ஹவுராவில் இருந்து மாலை 4.30 மணிக்கு தொடங்கி வைக்கப்படுகிறது.
இந்த ரயில் புதுச்சேரியில் இருந்து ஏப்ரல் 14ம் தேதியும், ஹவுராவில் இருந்து ஏப்ரல் 18ம் தேதியும் இயக்கப்படும்.
ஹவுராவில் இருந்து ஞாயிற்றுக்கிழமை அன்று, இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு புதுச்சேரி வந்தடையும்.
புதுச்சேரியில் இருந்து புதன்கிழமை அன்று காலை 11.30 மணிக்கு புறப்பட்டு, வியாழக்கிழமை இரவு 10.25 மணிக்கு ஹவுரா சென்றடையும்.
இந்த ரயிலில் ஏசி இரண்டாம் வகுப்பு பெட்டி இரண்டும், ஏசி மூன்றாம் வகுப்பு பெட்டி இரண்டும், எட்டு இரண்டாம் வகுப்பு (தூங்கும் வசதி) பெட்டியும், இரண்டாம் வகுப்பு முன்பதிவு செய்யப்படாத பெட்டிகள் நான்கும் இணைக்கப்பட்டுள்ளன.
இந்த ரயில் தற்காலிகமாக காட்பாடி, அரக்கோணம், செங்கல்பட்டு, விழுப்புரம் வழியாக புதுச்சேரிக்கு இயக்கப்படுகிறது.