For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இலங்கையில் நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப் பதிவு முடிந்தது

By Staff
Google Oneindia Tamil News

President Rajapakse casts his vote
கொழும்பு: இலங்கை நாடாளுமன்றத்திற்கு இன்று தேர்தல் நடந்து முடிந்தது. ஆங்காங்கே நடந்த சில வன்முறைச் சம்பவங்களைத் தவிர பெரிய அளவில் எந்தப் பிரச்சினையும் ஏற்படவில்லை.

இலங்கை நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று காலை தொடங்கியது. மொத்தம் 225 தொகுதிகளுக்கு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க தேர்தல் நடந்தது.

இதில் ராஜபக்சே கூட்டணி, சரத் பொன்சேகா கூட்டணி, ரணில் விக்கிரமசிங்கே கூட்டணி என மும்முனைப் போட்டி நிலவியது. தமிழர் பகுதிகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முக்கியக் கூட்டணியாக உள்ளது.

இன்று காலை தொடங்கிய வாக்குப் பதிவு மாலை 4 மணிக்கு முடிவடைந்தது. இன்றும் சில மணி நேரத்தில்வாக்குகள் எண்ணப்படவுள்ளன.


இன்று காலை வாக்குப் பதிவு தொடங்கியதும், ராஜபக்சே தனது சொந்த ஊரான ஹம்பந்தோட்டாவில் உள்ள பள்ளிக்கூட வாக்குச் சாவடியில் வாக்களித்தார்.

தேர்தலில் பல இடங்களில் வன்முறை வெடித்துள்ளதாக செய்திகள் வெளியாகின. காலே நகரில் நடந்த வன்முறையை அடக்க போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். பல வீடுகள், வாகனங்கள் தாக்கி சேதப்படுத்தப்பட்டன.

திரிகோணமலை மாவட்டத்தில் இரு இடங்களில் தமிழர்களை வாக்களிக்க விடாமல் டக்ளஸ் தேவானந்தாவின் ஆட்கள் அச்சுறுத்தி மிரட்டுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. இதுகுறித்து போலீஸில் புகார் தரப்பட்டுள்ளதாக கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தெரிவித்தார்.
தேர்தலில் ராஜபக்சே கூட்டணியே வெல்லும் என இலங்கைக் கருத்துக் கணிப்புகள் தெரிவித்துள்ளன.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X