For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

டெல்லி பழைய இரும்புப் பொருள் கடையில் கதிர்வீச்சு – 4 பேர் காயம்

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி: டெல்லியில் பழைய இரும்புப் பொருள் கடையில் ரேடியோ கதீர்வீச்சுத் தாக்குதலால் கடையின் உரிமையாளர் உள்பட நான்கு பேருக்குத் தீக்காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனால் அங்கு பீதி ஏற்பட்ட்டது.

டெல்லி மேற்குப் பகுதியில் உள்ள மாயாபுரியில் பழைய இரும்புப் பொருள் கடை உள்ளது. இதன் உரிமையாளர் தீபக் ஜெயின். இவரது கடைக்கு வந்த ஒரு இரும்புப் பொருளை அவர் தொட்டுப் பார்த்தபோது அவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. உடலில் தீக்காயம் ஏற்பட்டது. இதேபோல அவரது கடையில் இருந்த மேலும் 3 பேருக்கும் தீக்காயம் ஏற்பட்டது.

உடனடியாக நான்கு பேரும் மருத்துவமனைக்கு விரைந்தனர். தகவல் அறிந்ததும் போலீஸார் விரைந்து வந்தனர். கடையை மூடி சீல் வைத்தனர். சம்பந்தப்பட்ட பொருளிலிருந்து கதிர்வீச்சு வெளியேறுகிறதா என்பதை அறிய நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர்.

இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பீதி ஏற்பட்டது. ஆனால் இதுகுறித்து பீதி அடையத் தேவையில்லை. இது லேசான கதிர்வீச்சுதான் பயப்படத் தேவையில்லை என்று கூறியுள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X