For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

புதிய தலைமைச் செயலகம் முன்பு போராட்டம் - டாஸ்மாக் ஊழியர்கள் முடிவு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: டாஸ்மாக் ஊழியர்கள் சங்கம் சார்பில், பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, புதிய சட்டசபை முன்பு போராட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளனர்.

டாஸ்மாக் கடைகளில் சூப்பர்வைசர், விற்பனையாளர், 'பார்' உதவியாளர்கள் உள்ளிட்ட 33 ஆயிரம் பேர் பணியாற்றி வருகின்றனர்.

இவர்களுக்கு மிக குறைந்த ஊதியம் வழங்கப்படுவதாக ஊழியர்கள் சார்பில் குற்றம் சாட்டப்படுகின்றது.

இவர்களுக்கு காந்தி ஜெயந்தி, மிலாடி நபி, மகாவீர் ஜெயந்தி உட்பட வருடத்தில் ஐந்து நாட்கள் விடுமுறை. வார விடுப்பு, தற்செயல் விடுப்பு அரசு வழங்குவதில்லை என்று கூறப்படுகிறது.

டாஸ்மாக்கில் பணியாற்றும் பணியாளர்களை அரசு கருணை காட்டி, பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்று கோரியுள்ளனர்.

மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் புதிதாக அமைந்துள்ள தலைமைச் செயலகம் முன்பு மே மாதம் போராட்டம் நடைபெறும் என்று ஏ.ஐ.டி.யூ.சி - சியை சேர்ந்த டாஸ்மாக் ஊழியர்கள் அறிவித்துள்ளனர்.

பணி நிரந்தரம் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஒரு பிரிவினர் மார்ச் 17 ம் தேதி வேலை நிறுத்தம் செய்த போது, அதில் 81 பேரை சஸ்பெண்ட் செய்து அரசு உத்தரவிட்டது குறிப்பிடதக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X