For Daily Alerts
Just In
சென்னையில் திமுக பிரமுகர் வெட்டிப் படுகொலை
சென்னை: சென்னையில் மோட்டார் சைக்கிளில் சென்ற திமுக பிரமுகர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.
சென்னை மாதவரத்தில் வசித்து வந்தவர் நாராயணமூர்த்தி. திமுக பிரமுகர். இவர் நேற்று தனது நண்பருடன் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த நான்கு பேர் கொண்ட கும்பல் நாராயண மூர்த்தியை வழிமறித்து நிறுத்தி அரிவாள்களால் சரமாரியாக வெட்டியது. இதில் படுகாயமடைந்து விழுந்தார் நாராயணமூர்த்தி.
உடனடியாக அவரை தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு அவர் உயிரிழந்தார். இதையடுத்து போலீஸார் விரைந்து சென்று உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ரியல் எஸ்டேட் மோதல் காரணமாக இந்தக் கொலை நடந்திருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
Comments
Story first published: Sunday, April 11, 2010, 13:16 [IST]