For Daily Alerts
Just In
மாற்றுத் திறனாளிகளுக்கு சலுகைகளை வழங்கக் கோரி குன்னூரில் அதிமுக ஆர்ப்பாட்டம்
குன்னூர்: ஊனமுற்றோருக்கான சலுகைகளை வழங்கக் கோரி அதிமுக சார்பில், குன்னூரில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாற்றுத் திறனாளிகளுக்கு புதிய துறையை தமிழக அரசு அமைத்துள்ளது. அவர்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்படுவதாகவும் அரசு அறிவித்துள்ளது.
ஆனால் இதைக் குறை கூறி அறிக்கை விட்ட அதிமுக பொதுச் செயலாளர் ஜெயல்லிதா, மாற்றுத் திறனாளிகளை முதல்வர் கருணாநிதி ஏமாற்றப் பார்க்கிறார் என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில், நீலகிரி மாவட்ட அதிமுக சார்பில், குன்னூர் வி.பி. தெருவில், பழைய லாரி நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதிமுக அமைப்புச் செயலாளர் பொன்னையன் தலைமை தாங்கினார். நூற்றுக்கணக்கான அதிமுகவினர் கலந்து கொண்டனர்.
Comments
அதிமுக மாற்றுத் திறனாளிகள் போராட்டம் நீலகிரி admk differently abled handicapped ooty nilgiris protest
Story first published: Monday, April 12, 2010, 16:54 [IST]