சமாஜ்வாடி கைவிட்டதால் தெலுங்கு தேசத்திற்குத் திரும்புகிறார் ஜெயப்பிரதா
ஆந்திராவைச் சேர்ந்தவர் ஜெயப்பிரதா. ஆரம்பத்தில் தெலுங்குதேசத்தில் இருந்தார். பின்னர் அமர்சிங்கின் நட்பு கிடைக்கவே தெலுங்குதேசத்திலிருந்து விலகி சமாஜ்வாடி கட்சியில் இணைந்தார். உ.பி. அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார்.
அமர்சிங்கின் நிழல் போல திகழ்ந்து வந்த ஜெயப்பிரதா, ராம்பூர் தொகுதியிலிருந்து எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். சமீபத்தில் அமர்சிங்கும், ஜெயப்பிரதாவும் ஒரே நாளில் சமாஜ்வாடிக் கட்சியிலிருநது நீக்கப்பட்டனர்.
அமர்சிங் எங்கு போவது என்று தெரியாமல் குழம்பிப் போயிருப்பதால் மீண்டும் ஆந்திர அரசியலுக்குத் திரும்ப முடிவு செய்துள்ளாராம் ஜெயப்பிரதா. மீண்டும் தெலுங்கு தேசத்திற்கேத் திரும்பவும் அவர் முடிவு செய்துள்ளார்.
ஜெயப்பிரதா தெலுங்கு தேசத்தில் இணைந்தால் அவருக்கு மகளிர் அணித் தலைவி பதவி கொடுக்கப்படும் எனத் தெரிகிறது. அநத்ப் பதவியில் முன்பு இருந்தவர் நடிகை ரோஜா. அவர் சமீபத்தில்தான் காங்கிரஸில் போய் இணைந்தார்.
எனவே ரோஜா இடத்திற்கு ஜெயப்பிரதாவைக் கொண்டு வர சந்திரபாபு நாயுடுவும் ஆர்வமாக உள்ளாராம்.