For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நெல்லையில் குழப்பம்- இடம் மாறிச் சென்ற பத்தாம் வகுப்பு விடைத்தாள்

By Staff
Google Oneindia Tamil News

திருநெல்வேலி: முசிறியைச் சேர்ந்த 262 மாணவர்களின் பிளஸ்டூ விடைத்தாள்கள் காணாமல் போன சர்ச்சையைத் தொடர்ந்து தற்போது நெல்லையில் பத்தாம் வகுப்பு மாணவர்களின் விடைத்தாள் மாறிச் சென்று புதுக் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவடைந்து தற்போது விடைத்தாள்கள் திருத்தும் பணி தொடங்கியுள்ளது. இன்று முதல் விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியுள்ளது.

இந்த நிலையில், திருநெல்வேலி முக்கூடல் அரசு மேல்நிலைப்பள்ளி பத்தாம் வகுப்பு மாணவர்கள் 450 பேரின் சமூக அறிவியல் விடைத்தாள்கள் திருத்துவதற்காக திருச்சி மண்ணச்சநல்லூர் அரசுப் பள்ளிக்கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இவற்றை ஆர்.எம்.எஸ். எனப்படும் ரயில்வே மெயில் சர்வீஸ் மூலம அனுப்பி வைத்தனர்.

நாகர்கோவில் –தஞ்சாவூர் ரயிலில் இநத விடைத்தாள் கட்டுக்கள் சென்றன. ஆனால் திருச்சி ரயில் நிலையத்திற்கு விடைத்தாள் கட்டுக்கள் வந்தபோது, அதை பெற்றுக் கொள்ள வேண்டியவர்கள் வரவில்லை. இதனால் விடைத்தாள் பார்சல் கட்டுக்கள் நாகர்கோவிலுக்கே மீண்டும் போய் விட்டன.

இன்று விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியபோது முக்கூடல் பள்ளி விடைத்தாள்கள் வந்து சேராத்து தெரிய வந்த்து. இதுகுறித்து சம்பந்தப்பட்ட பள்ளிக்கு தகவல் போனது. அவர்கள் விசாரித்த்தில், பார்சல் மாறிப் போனது தெரிய வந்த்து.

இதையடுத்து ரயில்வே மெயில் சர்வீஸுக்குத் தகவல் தெரிவித்தபோது நாகர்கோவிலில் பார்சல் இருப்பதாகவும், அங்கிருந்து திருச்சிக்கு அது அனுப்பி வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் இதுவரை விடைத்தாள் திருச்சிக்கு வந்து சேரவில்லையாம்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X