For Daily Alerts
Just In
விமானத்தில் ரசாயன கசிவு: 5 சிப்பந்திகள் மயக்கம்-அவசரமாய் தரையிறக்கம்
கெப்லாவிக் (ஐஸ்லாந்து): பாரிசில் இருந்து அமெரிக்காவின் டல்லாஸ் நகருக்குச் சென்று கொண்டிருந்த விமானத்தில் ரசாயனப் புகை பரவியதால் 5 விமான சி்ப்பந்திகளுக்கு மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அந்த விமானம் அவசரமாக ஐஸ்லாந்து நாட்டில் தரையிறக்கப்பட்டது.
நேற்று 145 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் இந்தச் சம்பவம் நடந்தது.
போயிங் 767 ரகத்தைச் சேர்ந்த இந்த விமானத்தின் உணவுப் பொருட்களை வைக்கும் பகுதியில் நின்றிருந்த 5 விமான சிப்பந்திகளும் மயங்கி விழுந்தனர். உணவை சூடாக்க அவர்கள் யன்றபோது ஏதோ ரசாயனம் பரவியதால் இந்த சம்பவம் நடந்தது.
இதையடுத்து அந்த விமானத்தை ஐஸ்லாந்து நாட்டின் கெப்லாவி்க் விமான நிலையத்தில் விமானிகள் அவசரமாக தரையிறக்கினர்.
Comments
Story first published: Wednesday, April 14, 2010, 12:39 [IST]