தமிழ்வழி பொறியியல் பட்டம்: ரூ.2 கோடியில் வகுப்பறை தயாராகின்றன
நெல்லை: நெல்லை அண்ணா பல்கலைக்கழகத்தில் தமிழ் வழியில் பொறியியல் இளநிலை பட்டப்படிப்பு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ரூ.2 கோடி செலவில் வகுப்பறைகள் கட்டும் பணிகள் தயாராகிவருகின்றன.
நெல்லை அண்ணா பல்கலைக்கழகம் தற்போது அரசு பொறியியல் கல்லூரி வாளகத்தில் இயங்குகிறது. பல்கலையின் முதுநிலை பொறியியல் பட்டப்படிப்பு வகுப்புகள் தனியார் கட்டிடத்தில் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் பல்கலைக்கழகத்துக்கு தனியாக கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்காக பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அரசு பொறியியல் கல்லூரி அருகே சர்வதேய சங்கத்திற்கு சொந்தமான இடத்தை அண்ணா பல்கலைக்கழக நிர்வாகம் தேர்வு செய்தது. இதில் புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கு ஒப்புதல் வழங்க மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளிக்கப்பட்டது.
இதற்கிடையே, நெல்லை அண்ணா பல்கலைக்கழகத்தில் இந்த ஆண்டு முதல் இளங்கலை பொறியியல் பட்டப்படிப்புக்கு (பிஇ) தமிழ்வழி கல்வி வகுப்புகள் துவக்கப்பட உள்ளதால் கூடுதல் வகுப்புறைகள் ஏற்படுத்த பல்கலைக்கழக நிர்வாகம் தீவிர முயற்சி எடுத்து வருகிறது.
சென்னையில் நடந்த அண்ணா பல்கலைக்கழக சிட்டிகேட் கூட்டத்தில் நெல்லை அண்ணா பல்கலைகழக புதிய வகுப்பறை கட்டிட பணிகளுக்காக ரூ.2 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.