அகமதாபாத் – குப்பையில் வீசப்பட்டிருந்த 14 இறந்த சிசுக்கள் மீட்பு
அகமதாபாத்: குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரின் பாபு நகர் பகுதியில் குப்பைத் தொட்டியில் வீசப்பட்டிருந்த 14 சிசுக்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
லால்பகதூர் சாஸ்திரி ஸ்டேடியம் அருகே இந்த பயங்கரம் நடந்தது. அங்குள்ள குப்பைத் தொட்டியில் சிசுக்களின் இறந்த உடல்கள் கிடப்பதைப் பார்த்த சிலர் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து விரைந்து வந்த போலீஸார் அந்த சிசுக்களின் இறந்த உடல்களை மீட்டனர்.
இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் லஸ்காரி கூறுகையில், மொத்தம் 14 சிசுக்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அவற்றை பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளோம்.
இந்த சிசுக்களின் பாலினம் அறியப்பட்ட பின்னர் இதுதொடர்பாக வழக்கு தொடரப்படும் என்றார்.
அப்பகுதியில் உள்ள தனியார் நர்சிங் ஹோம்களைச் சேர்ந்தவர்கள் இந்த சிசுக்களை குப்பைத் தொட்டியில் வீசியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.