For Daily Alerts
Just In
விமானங்களைத் தகர்க்க தீவிரவாதிகள் சதி – நாடு முழுவதும் உஷார்
இதுதொடர்பாக உளவுத்துறை விடுத்துள்ள எச்சரிக்கைச் செய்தியில், நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களுக்குள் புகுநது விமானங்களைத் தாக்கித் தகர்க்க தீவிரவாதிகள் சதித் திட்டம் தீட்டியுள்ளனர் என்று எச்சரித்துள்ளது.
இதையடுத்து நாடு முழுவதும் விமான நிலையங்களில் கூடுதல் உஷார் நிலையை மேற்கொள்ளுமாறு பாதுகாப்புப் படையினருக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
பயணிகளின் உடமைகளை முழுமையாக சோதிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. காமன்வெல்த் போட்டிகளை சீர்குலைக்கும் வகையில் இந்த்த் திட்டத்தை தீவிரவாதிகள் தீட்டியிருப்பதாக கருதப்படுகிறது.
Comments
Story first published: Monday, April 19, 2010, 14:35 [IST]