For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஐபிஎல்: தீவிரவாதிகளால் ஆபத்து-மகாராஷ்டிர அரசுக்கு எச்சரிக்கை

Google Oneindia Tamil News

Patil Stadium
டெல்லி: ஐபிஎல் அரை இறுதிப் போட்டிகள் மும்பைக்கு மாற்றப்பட்டிருப்பதால் தீவிரவாதிகளின் இலக்கு மும்பைக்கு மாறக் கூடும் என்று மத்திய உள்துறை அமைச்சகம், மகாராஷ்டிர அரசை எச்சரித்துள்ளது.

பெங்களூரில் நடைபெறவிருந்த ஐபிஎல் அரை இறுதிப் போட்டிகள் மும்பைக்கு மாற்றப்பட்டுள்ளன.

நாளை முதல் அரை இறுதிப் போட்டியும், வியாழக்கிழமை 2வது அரை இறுதிப் போட்டியும் நடைபெறவுள்ளது.

பெங்களூர் குண்டுவெடிப்புச் சம்பவத்தை தொடர்ந்து அரை இறுதிப் போட்டிகளை மும்பைக்கு மாற்றியது ஐபிஎல். ஆனால் மும்பைக்கு இதனால் ஆபத்து ஏற்படலாம் என உள்துறை அமைச்சகம், மகாராஷ்டிர அரசை எச்சரித்துள்ளது.

இதுகுறித்து மாநில டிஜிபி ஏ.என்.ராய் கூருகையில், மும்பைக்கு போட்டிகள் மாற்றப்பட்டுள்ளதால் தீவிரவாதிகள் போட்டியை சீர்குலைக்க முயலக் கூடும் என உள்துறை எச்சரித்துள்ளது.

போட்டிகள் நடைபெறும் பாட்டீல் ஸ்டேடியம் அருகேயும், உள்ளேயும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 3 கட்ட பாதுகாப்பு ஸ்டேடியத்தைச் சுற்றிலும் போடப்பட்டுள்ளது என்றார்.

அரை இறுதிப் போட்டிகள் தவிர 25ம் தேதி மும்பையிலேயே இறுதிப் போட்டியும் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X