எப்படி ஐபிஎல் நிர்வாகக் குழுக் கூட்டத்தை நடத்தலாம்?- மோடி
மும்பை: இந்திய கிரிக்கெட் வாரியம் கூட்டியுள்ள ஐபிஎல் நிர்வாகக் குழுக் கூட்டம் சட்டவிரோதமானது. எனவே அதை ரத்து செய்ய வேண்டும் என லலித் மோடி கூறியுள்ளார்.
உண்மையில் மோடிதான் இந்தக் கூட்டத்தைக் கூட்டியிருக்க வேண்டும். ஆனால் சத்தம் காட்டாமல் அமைதியாக இருந்ததால், கிரிக்கெட் வாரியத் தலைவர் மனோகரே கூட்டத்தைக் கூட்டியுள்ளார்.
திங்கள்கிழமை நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தை நிறுத்த தற்போது மோடி களம் இறங்கியுள்ளார். ஐபிஎல் தலைவரான தனக்குத்தான் நிர்வாகக் குழுக் கூட்டத்தைக் கூட்டும் அதிகாரம் உள்ளதாக கூறும் அவர், இக்கூட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என கோரியுள்ளார்.
மேலும், நிர்வாகக் குழுவின் ஒப்புதலைப் பெற்றுத்தான் அனைத்து முக்கிய முடிவுகளையும் தான் எடுத்ததாகவும் மோடி கூறியுள்ளார். இதன் மூலம் கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்த அவர் முனைந்துள்ளது தெரிய வருகிறது.