டெல்லியில் தீவிரவாத தாக்குதல் நடக்கலாம்-அமெரிக்கா எச்சரிக்கை
அமெரிக்கர்கள் பாதுகாப்பாக இருக்குமாறும் அந் நாட்டுத் தூதரதம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்காவைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய, கனடா நாட்டுத் தூதரகங்களும் இந்தியாவில் உள்ள தங்கள் நாட்டினருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன.
முன்னதாக வாஷிங்டனில் வெள்ளை மாளிகை அதிகாரி பி.ஜே.கெரெளலி நிருபர்களிடம் கூறுகையி்ல், இந்திய நகரங்களி்ல், குறிப்பாக டெல்லியில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளனர். இது குறி்த்து எங்களுக்கு திட்டவட்டமான தகவல் கிடைத்துள்ளது. இது தொடர்பாக இந்திய உளவுப் பிரிவினருடன் அமெரிக்க உளவுப் பிரிவினர் தகவல்களை பரிமாறிக் கொண்டுள்ளனர்.
குறிப்பாக அமெரிக்கர்கள், மேற்கு நாடுகளைச் சேர்ந்தவர்கள் டெல்லியில் அதிகமாக செல்லும் சாந்தினி செளக், கன்னாட் பிளேஸ், கிரேட்டர் கைலாஷ், கரோல் பாக், மெஹ்ரூலி, சரோஜினி நகர் ஆகிய இடங்களை தீவிரவாதிகள் குறி வைத்துள்ளனர் என்றார்.
ஆனால், தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளது எந்த அமைப்பு என்பதை அவர் தெரிவிக்கவில்லை.