26% பங்குகளை வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு விற்கும் வீடியோகான்
மும்பை: தனது 26 சதவிகித பங்குகளை வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு விற்கிறது வீடியோகான் இன்டஸ்ட்ரீஸ். புதிதாக துவங்கப்பட்ட டெலிகாம் துறைப் பங்குகளை மட்டுமே விற்கிறது இந்நிறுவனம்.
இதுகுறித்து வீடியோகான் நிறுவனத்தின் தலைவர் வேணுகோபால் தூத் கூறுகையில், 'பல வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தொடர்ந்து வீடியோகானின் டெலிகாம் பங்குகளை வாங்க விருப்பம் தெரிவித்துள்ளனர். எனவேதான் அவற்றை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளோம்.
இதன் மூலம் தற்போது ரூ 12000 கோடி மதிப்புள்ள நிறுவனமாகத் திகழும் வீடியோகான் மேலும் அதிக விரிவாக்கம் பெறும்....', என்றார்.
வீடியோகான் நிறுவனம் சமீபத்தில்தான் சென்போன் துறையில் கால்பதித்தது. தமிழகம், குஜராத் மற்றும் மும்பை வட்டங்களில் சேவையைத் துவங்கியுள்ள இந்த நிறுவனம் அடுத்த 3 ஆண்டுகளில் 10 கோடி வாடிக்கையாளர்களுக்கு குறி வைத்துள்ளது. இதற்காக ரூ 15000 கோடி வரை முதலீடு செய்யவும் திட்டமிட்டுள்ளது.
மேலும் 3 ஜி சேவையிலும் கால்பதிக்கத் திட்டமிட்டுள்ளது. தற்போது பரபரப்பாக நடக்கும் 3 ஜி ஏலத்திலும் பங்கேற்றுள்ளது.
தொலைத் தொடர்பு நிறுவனங்கள் தங்கள் பங்குகளை தனியாருக்கு விற்பது இது முதல் முறையல்ல. ஏற்கெனவே எடிஸலாட் டிபி, யுனினார் போன்றவை தங்களின் கணிசமான பங்குகளை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்று, விரிவாக்கம் செய்துள்ளன.