பட்டுக்கோட்டையில் வழக்கறிஞருக்கு அரிவாள் வெட்டு - மர்ம கும்பல் தப்பியோட்டம்
பட்டுக்கோட்டை: சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞரான காசிநாதன் வழக்கு சம்பந்தமாக பட்டுக்கோட்டை சென்ற போது அங்கு அவரை மர்ம கும்பல் ஒன்று அவரை சரமாரியாக வெட்டியது.
சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞராக பணிபுரிவர் காசிநாதன். இவர் வழக்கு ஒன்று சம்பந்தமாக பட்டுக்கோட்டை நீதிமன்றத்திற்கு சென்றார்.
அங்கு அவர் தனது வேலைகளை முடித்துக் கொண்டு நீதிமன்றத்திற்கு அருகில் உள்ள சந்திரா மெஸ் -சில் உணவருந்தி விட்டு வெளியே வந்தார்.
அப்போது, அவரை 30 பேர் கும்பல் சூழ்ந்து கொண்டு உருட்டுக்கட்டையால் தாக்கியது. மேலும் அரிவாளால் சரமாரியாக தலையில் வெட்டி விட்டு அந்த கும்பல் தப்பி ஓடிவிட்டது. இதனால் அதே இடத்தில் வழக்கறிஞர் காசிநாதன் சரிந்து விழுந்தார்.
இதைக் கண்ட வழக்கறிஞர்கள் சிலர் சிகிச்சைக்காக அவரை பட்டுக்கோட்டை மருத்துவமனையில் சேர்த்தனர்.
தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டதோடு, வழக்கறிஞரை அரிவாளால் வெட்டிய மர்ம கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.