For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கருணாநிதி, ப.சிதம்பரத்துக்கு ராஜபக்சே எவ்வளவோ மேல்: சீமான்

Google Oneindia Tamil News

புதுக்​கோட்டை: முதல்வர் கருணாநிதி, உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு ராஜபக்சே எவ்வளவோ மேல் என்று கூறியள்ளார் நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமான்.

புதுக்கோட்டையில், பிரபாகரன் தாயார் பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பப்பட்டதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு சீமான் பேசுகையில்,

சிகிச்​சைக்​காக வந்த பிர​பா​க​ர​னின் தாயைத் திருப்பி அனுப்​பி​யது தெரி​யா​மல் நடந்த நிகழ்​வல்ல.​ ஒட்​டு​மொத்த தமி​ழர்​க​ளின் தன்​மா​னத்​துக்கு விடப்​பட்ட சவால்.​ மத்​திய உள்​துறை அமைச்​ச​ருக்கு தெரி​யா​மல் இது நடந்​தி​ருக்​கவே முடி​யாது.​ பார்​வதி அம்​மாள் வந்​தது தனக்​குத் தெரி​யாது என முதல்​வர் கூறு​வது அவ​ருக்கு மிகப் பெரிய அவ​மா​னம்.​

பார்​வதி அம்​மா​ளுக்கு சுய​நி​னைவு கிடை​யாது,​​ அவ​ருக்கு நினைவு இருந்​தி​ருந்​தால் நிச்​ச​யம் தமி​ழ​கத்​துக்கு வந்​தி​ருக்​க​மாட்​டார்.​

சிகிச்​சைக்​காக வந்த பார்​வதி அம்​மா​ளைத் திருப்பி அனுப்​பிய இதே அர​சு​தான் ராஜ​பக்​ஷ​வின் இரு மகன்​க​ளை​யும் அதே விமான நிலை​யத்​தில் படை பரி​வா​ரங்​க​ளு​டன் வர​வேற்று திருப்​ப​திக்கு சாமி தரி​ச​னம் செய்ய அனுப்பி இருக்​கி​றது.​

தமி​ழி​னம் மிக​வும் இக்​கட்​டான நிலை​யில் இருக்​கி​றது.​ நமது உரி​மை​கள் பறிக்​கப்​ப​டு​கின்​றன.​ இச்​சூ​ழலை வென்​றெ​டுக்​கும் நோக்​கில் தொடங்​கப்​பட்​ட​து​தான் நாம் தமி​ழர் இயக்​கம்.​ எனவே தமி​ழர்​க​ளுக்​கான அரசை விரை​வில் நிறுவ அனை​வ​ரும் ஆத​ர​வ​ளிக்க வேண்​டும் என்​றார் சீமான்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X