For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்த ஆண்டு வழக்கமான மழை பெய்யும்: வானிலை இலாகா

By Chakra
Google Oneindia Tamil News

டெல்லி: இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

வரும் ஜுன் முதல் செப்டம்பர் மாதம் வரை தென்மேற்கு பருவ மழை சராசரியான அளவில் 98 சதவீதம் வரை பெய்யும்.

இந்த காலத்தில் அதிகபட்சமாக நமது நாட்டில் குறைந்தது 89 சென்டி மீட்டர் மழையாவது பெய்யும். இது கடந்த 1941 முதல் 1990 வரையிலான சராசரியாகும்.

கடந்த ஆண்டு இதே பருவ மழை போதிய அளவு பெய்யாததால் நமது நாடு கடுமையான வறட்சியை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால் இந்த ஆண்டு அந்த நிலை ஏற்பட வாய்ப்பில்லை.

இம்முறை வழக்கமான அளவு மழை பெய்யும். இதனால் பருவ மழையை எதிர்பார்த்துக் காத்திருக்கும் 20.35 கோடி விவசாயிகளின் வாழ்க்கை தரம் பாதிக்கப்படாது.

விவசாய உற்பத்தி சிறப்பாக இருக்கும் என்பதால் நாட்டின் பொருளாதார வளர்ச்சியிலும் முன்னேற்றம் ஏற்படும் என்று கூறப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X