For Daily Alerts
Just In
இந்திய எல்லைப் பகுதியில் குவித்து வைத்திருந்த 1 லட்சம் ராணுவத்தினரை அகற்றியது பாகிஸ்தான்
இதுகுறித்து பென்டகன் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், தனக்கு ஆபத்து இந்தியாவால் அல்ல என்பதை படிப்படியாக புரிந்து வருகிறது பாகிஸ்தான். உள்ளூர் தீவிரவாதிகளாலும், தலிபான் தீவிரவாதிகளாலும்தான் பாகிஸ்தான் தேசப் பாதுகாப்புக்கு பெரும் அபாயம் நிலவுவதாக பாகிஸ்தான் புரிந்து கொண்டுள்ளது.
இதையடுத்து கிழக்குப் பிராந்தியத்தில் இந்திய எல்லையையொட்டி குவித்து வைத்திருந்த 1 லட்சம் படையினரை அங்கிருந்து விலக்கி ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் தலிபான்களுக்கு எதிரான போருக்கு திருப்பியுள்ளது பாகிஸ்தான் ராணுவம்.
பாகிஸ்தானின் இந்த வரலாறு காணாத நிலை மாற்றம் நிச்சயம் வரவேற்கக் கூடியதே என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா பாகிஸ்தான் ராணுவம் குவிப்பு எல்லை வாபஸ் ஆப்கானிஸ்தான் தலிபான் pak military border withdraw afghanistan talibans
Story first published: Thursday, April 29, 2010, 16:55 [IST]